![]() |
ஓ! மனிதனே!....
கேட்டுக்கொள்.
வலையமைப்பில் சிக்கி
சின்னாபின்னமான
மனிதங்களைப் பற்றி....
ஓ! மனிதனே!......
கேட்டுக்கொள்.
இணையப் பாவணையால்
இணைப்பறுந்து போன
எம் உறவுப் பாலங்களைப் பற்றி...
ஓ! மனிதனே!.....
கேட்டுக்கொள்.
பற்றியத்தைப் பற்றியதால்
பைத்தியம் பிடித்தவர்கள் பற்றி......
ஓ! மனிதனே!....
கேட்டுக்கொள்.
கீச்சகம் - எம்முள்
கிழித்தெறிந்த பக்கங்களைப் பற்றி.....
ஓ! மனிதனே!.....
தெரிந்துகொள்.
வலையமைப்பு என்பது
பாதுகாப்பானது அல்ல;
வஞ்சகர் சூழ்ச்சியின்
விஸ்வரூபமும் என்பதை....

No comments:
Post a Comment